சென்னை:
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து கொட்டி தீர்த்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மாநிலத்தில் மழை வெள்ளம் குறித்த தகவல் கட்டுப்பாடு விபரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பல பகுதிகளை நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் கனமழையின் காரணமாகவும், பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக 08.11.2021 மற்றும் 09.11.2021 ஆகிய இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ள பொது மக்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.