திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் வருகிற 2024ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகளை உடனே தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்ததையடுத்து 2 மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிப்பதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் 12ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் ஆலோசனையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.