சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு கடந்த ஒன்னரை வருடங்களுக்கும் மேலாக வகுப்புகள் நடக்கவில்லை. எனவே பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படாததால் மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து பாதிக்கப்பட்டனர்.
விடுமுறை நாட்களை ஈடுகட்ட, அடுத்து வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளில் வகுப்புகளை நடத்த கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 1 தேதி முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. .தொடர்ந்து தீபாவளி பண்டிகை வந்தததால் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது.
எனவே வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட உள்ளது. அரசு பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறந்து, பாடங்களை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.