சென்னை:
வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி 2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் ரூ.85 கோடி மதிப்பிலான 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதிற்கும் இருப்பில் உள்ளதிற்கும் வித்தியாசம் இருக்கின்றது.
இதேபோல், தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். எனவே இந்தத் தவறில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
இந்நிலையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பை வரவேற்கிறேன் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கட்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.