தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் கோவை பகுதியில் பிச்சையெடுத்து வரும் நிகழ்ச்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த கிம் என்பவர் அந்நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்பு, மன நிம்மதி தேடி கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு வந்துள்ளார்.
வந்த இடத்தில் ஏழைகளுக்கு உதவி செய்த அவருக்கு ஏனோ நிம்மதியான உணர்வு வரவில்லை. இதனையடுத்து அவர் செய்த செயலால் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்.
அது என்னவென்றால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பிச்சையெடுத்து வருகிறார். கோவை ரயில் நிலைய பகுதியில் பிச்சையெடுக்கும் அவர் அதில் உணவு உட்பட இதர செலவுகளையும் பார்த்து கொள்கிறார்.
கரம் கூப்பி வணக்கம் வைத்து பிச்சையெடுப்பதால் மனநிம்மதி கிடைப்பதாக கிம் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.