தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பிரித்தானியாவில் பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்.
பிரித்தானியா நாட்டை சேர்ந்த எம்மா ப்ருவா என்பவர் 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதுவும் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானியாவில் குடியேற காதலனை மணந்தார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை சந்தோஷமாக செல்லவில்லை. இதனால் ஒன்றரை வருடங்கள் கழித்து விவகாரத்து செய்ய முடிவெடுத்தனர்.
2018ம் ஆண்டு நவம்பரில் விவாகரத்துக்கோரி மனுத்தாக்கல் செய்த அவர்களுக்கு சமீபத்தில் விவகாரத்து வழங்கப்பட்டது. இதனை மகிழ்ச்சியாக கொண்டாட நினைத்த எம்மா ப்ருவா உறவினர்களையும், நண்பர்களையும் பார்ட்டிக்கு அழைத்தார்.
சுமார் 500 பவுண்ட் செலவில் நடைபெற்ற பார்ட்டியில் எம்மாவின் தற்போதைய காதலரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.