தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மதுரை:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மதுரையில் வாகன ஓட்டிகளுக்கு குடிபோதை சோதனை செய்வதை தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் பிறப்பித்திருக்கிறார்.
வாகன சோதனையில் போலீசார் ஈடுபடும் போது வாகன ஓட்டிகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா; இல்லையா என்பதை வாயை ஒரு சொல்லியோ அல்லது ப்ரீத்தலைஸர் (Breathalyzer) கருவி மூலமோ சோதனை செய்வதால் வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கொரோனா வைரஸ் மூச்சுக்காற்று மூலம் பரவுவதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது
இதனால் குடிமகன்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.