சென்னை:-
தமிழக அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தேவையானதை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் இரண்டு அல்லது மூன்று முன் ஊதிய உயர்வுகள் (Advance Increments) வழங்கப்பட்டு வந்தது.
இதன் காரணமாக சிலர் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளைப் படித்து கூடுதல் சம்பளத்தை பெற்று வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு இதுநாள்வரை வழங்கிவந்த முன் ஊதிய உயர்வை ரத்து செய்ய போவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
இதுநாள்வரையில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் உயர்கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதியம் உயர்வு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.
இனி அரசு பணியில் இருப்பவர்கள் உயர்கல்வியை காரணம் காட்டி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து இருந்துள்ளனர்.