சென்னை:
கொரோனா தொற்று அதிகரித்து வந்த சூழலில் இரண்டாம் அலை தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து நூலகங்களையும் மூட உத்தரவிட்டது.
தற்போது கொரோனா தொற்று குறைத்துள்ளதுள்ள சூழலில் படிப்படியாக அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
இச்சூழலில் அனைத்து நூலகங்களின் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழகத்தில் செயல்படும் அனைத்து நூலகங்களையும் திறக்கக் கோரினார்கள் .
அத்துடன் போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் கடும் இன்னலுக்கு உள்ளானார்கள். நோய்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில்பொது நூலகத்துறை கீழ் செயல்படும் நூலகங்களை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அனைத்து நூலகங்களையும் இன்று முதல் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள, அனைத்து வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகத்துறை கீழ் செயல்படும் நூலகங்களை திறக்க அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.