தமிழகம்

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் வர்த்தக நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரி சோதனை

செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமான சூப்பர் சரவணா ஸ்டோர், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தி.நகர், போரூர், புரசைவாக்கம், குரோம்பேட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

ALSO READ  மனைவின் கழுத்தை அறுத்துக் கொன்ற பேராசிரியருக்கு மரண தண்டனை விதித்த உயர்நீதிமன்றம் !

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரிஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து ஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய சோதனையில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு…!

naveen santhakumar

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நீட்டிப்பு

Admin

அரையாண்டு விடுமுறையில் சகோதரிகளுக்கு நேர்ந்த சோகம்

Admin