சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் வர்த்தக நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
செல்வ ரத்தினம் மற்றும் ராஜரத்தினத்திற்கு சொந்தமான சூப்பர் சரவணா ஸ்டோர், சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு புகார் வந்ததையடுத்து இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தி.நகர், போரூர், புரசைவாக்கம், குரோம்பேட்டை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமான வரித்துறை சோதனை நடைபெறும் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் வரிஏய்ப்பு புகார் வந்ததை அடுத்து ஐடி அதிகாரிகள் சோதனை நடத்திய சோதனையில் சுமார் 434 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.