வேலூர்:-
சேலம் மாவட்டம் கூழையூரைச் சேர்ந்த சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையாத நிலையில், இந்த முறை அந்தத் தேர்வை எதிர்கொள்ள அச்சப்பட்டு தேர்வு நடைபெற்ற ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களான ஜெயலட்சுமி – கருணாநிதி தம்பதியினரின் தம்பதியினர் நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா, நீட் தேர்வு எழுதிய நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாணவி செளந்தர்யா நீட் தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதற்கு பதில் அரசியல்வாதிகள் செய்யும் தேவைற்ற அரசியல் மற்றும் பெற்றோரின் திணிப்பு ஆகியவையே இதுபோன்ற தற்கொலைகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.