தமிழகம்

பெரியார் அண்ணா வழியில் பாடுபடுகிறேன்; வைக்கோ பேச்சு 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இலங்கை கடற்படையினர் அண்மையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்தனர். இதற்காக இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், திமுக அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உயிரிழந்த மீனவர்களின் உடல்களை பார்க்க அனுமதிக்காதவர்கள் ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்று தெரிவித்தார். 4 மீனவர்கள் மரணம் தொடர்பாக இதுவரை தமிழக அரசு ஒரு வழக்குக்கூட பதிவு செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தான் இலட்சியங்களுக்காக அரசியல் நடத்துவதாகவும், பெரியார், அண்ணா வழியில் பாடுபடுகிறோம் என்று சொல்ல தனக்கு தகுதி உள்ளதாகவும் அவர் கூறினார்.


Share
ALSO READ  ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்?

Shanthi

ஏற்றப்பட்டது கார்த்திகை மகா தீபம்!

Shanthi

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பிளாஸ்டிக் குவிந்து , கடல் மாசு அதிகரித்து வருவதால் மீனவர்கள் கவலை..!!

Admin