ஜம்மு காஷ்மீரில் மூன்று குழந்தைகளுக்கு தாய்யான பூஜா தேவி என்பவர் முதல் பெண் ஓட்டுநராக உருவெடுத்துள்ளார்.
ஓட்டுநர் பூஜா தேவி மூன்று குழந்தைகளுக்கு தாய்யான அவர் ப்ளானி, சண்டார் உள்ளிட்ட கத்துவா மாவட்டப் பகுதிகளில் பேருந்தை இயக்கி வருகிறார். கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர்-கத்துவா வழித்தடத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவரின் முதல் பயணியாக அவரின் மகனும் அந்த பேருந்தில் இருந்தார். தன்னுடைய உறவினரிடமிருந்து வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டதாகக் கூறிய பூஜா தேவியின் பேருந்து ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது
அதனையடுத்து பூஜா தேவி பேருந்து ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. அதனை அறிந்த கத்துவா பகுதியின் காவல் துணை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ், பூஜா தேவியை நேரில் அழைத்து ஓட்டுனர் தொழிலை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டினார். பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரமான பூஜா தேவி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஓட்டுநர் பூஜா தேவியின் புகைப்படத்தை பகிர்ந்து ஜம்மு காஷ்மீரில் முதல் பெண் ஓட்டுனர் உருவாகியுள்ளது மிகவும் பொறுமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதனைதொடரந்து பூஜா தேவிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.