இந்தியா

ஜம்மு காஸ்மீரில் பேருந்தும் ஓட்டும் முதல் பெண்; இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜம்மு காஷ்மீரில்  மூன்று குழந்தைகளுக்கு தாய்யான  பூஜா தேவி என்பவர் முதல் பெண் ஓட்டுநராக உருவெடுத்துள்ளார்.

ஓட்டுநர் பூஜா தேவி  மூன்று குழந்தைகளுக்கு தாய்யான அவர் ப்ளானி, சண்டார் உள்ளிட்ட கத்துவா மாவட்டப் பகுதிகளில் பேருந்தை இயக்கி வருகிறார். கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர்-கத்துவா வழித்தடத்தில் தனது முதல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவரின் முதல் பயணியாக அவரின் மகனும் அந்த பேருந்தில் இருந்தார். தன்னுடைய உறவினரிடமிருந்து வாகனம் ஓட்ட கற்றுக்கொண்டதாகக் கூறிய பூஜா தேவியின் பேருந்து ஓட்டும்  புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது

அதனையடுத்து பூஜா தேவி பேருந்து ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. அதனை அறிந்த கத்துவா பகுதியின் காவல் துணை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ், பூஜா தேவியை நேரில் அழைத்து ஓட்டுனர் தொழிலை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டினார். பெண்கள் தங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுத்து பயணிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரமான பூஜா தேவி இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினார்.

ALSO READ  சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்பட்ட மீன்…

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஓட்டுநர் பூஜா தேவியின் புகைப்படத்தை பகிர்ந்து ஜம்மு காஷ்மீரில் முதல் பெண் ஓட்டுனர் உருவாகியுள்ளது மிகவும் பொறுமையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதனைதொடரந்து பூஜா தேவிக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேருந்துகள் இயங்க அனுமதி- முதல்வர் அறிவிப்பு…!

naveen santhakumar

மீண்டும் உயரும் கொரோனா- ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்…!

naveen santhakumar

சட்டசபையில் ஒலித்த “Go Back Governor” கோஷம்

Admin