சிவகங்கை:-
கீழடியில் 7-ம் கட்ட அகழ் ஆய்வில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.13-ம் தேதி முதல் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில், சுடுமண்ணால் ஆன மேலும் ஒரு தொட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 அடி 4 அடி சுற்றளவு கொண்ட கீழ் உறைகிணறு தென்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே பல அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுப்பிடிக்கப்பட்டது.
இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘உறை கிணற்றை சுடுமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டி’ என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு குழப்பியதால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.