தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் குடிமகன்களுக்கு சத்தமில்லாமல் அதிர்ச்சி காத்திருக்கிறது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் 3 கட்ட ஊரடங்குகளை அமல்படுத்தும் அளவிற்கு அதன் தாக்கத்தை காட்டியது.
இந்தியாவில் தொடரும் பாதிப்புகள், அதிகரிக்கும் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க 45 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகளை நிபந்தனையுடன் திறக்கலாம் என மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. குவார்ட்டருக்கு ரூ.20 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை சரிசெய்ய மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இச்செய்தி குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.