தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 14 ஆயிரத்து 276 ஆகும். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 94 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து 27லட்சத்து 14 ஆயிரத்து 643 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 9 ஆயிரத்து 323 பேர் வந்துள்ளனர்.
சென்னையில் 6 ஆயிரத்து 190 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4 ஆயிரத்து 450 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.