சென்னை:-
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி, செய்யப்படவுள்ளது.
2021 – 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெடை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதம், தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இதற்கு துறைரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.
திமுக, அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன், பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலமைச்சர் தலைமையில் தமிழக பட்ஜெட் தொடர்பான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதில், நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 13 தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கையும் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.