சென்னை:-
புதிய கல்விக் கொள்கை 2020 என்ற பெயரில் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக முதல்வர் ஈபிஎஸ்-க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்கவே மாட்டோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியட்டுள்ள அறிக்கையில்:-
தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தாலும், அதிமுக அரசு மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டரில் பதிவில்:-
புதிய தேசிய கல்வி கொள்கை பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. மொழிக்கொள்கை மட்டுமல்ல, கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்’ எனகுறிப்பிட்டுள்ளார்.