வேலூர்:-
வேலூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, பழனியப்பன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி தி.மு.க எம்.எல்.ஏ செங்குட்டுவன், திட்டக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கணேசன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.