தமிழகம்

e-Pass பெறாதவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்று கிடையாது… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர்:-

இ-பாஸ் பெறாமல் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று வேலூா் மாநகராட்சி அறிவித்துள்ளது.

வேலூா் மாநகரிலுள்ள வேலூர் சிஎம்சி, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் வந்து செல்கின்றனா். அவ்வாறு சிகிச்சை பெறுபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வேலூா் மாநகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்படுகின்றன.

ALSO READ  அஞ்சலக தேர்வு இனி தமிழில் எழுதலாம் !
CMC vellore.

தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எனினும், பிற மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருவோர் பெரும்பாலும் இ-பாஸ் பெறாமல் முறைகேடாக வந்து செல்கிறார்கள். அவ்வாறு இ-பாஸ் பெறாமல் வருபவா்களால் வேலூா் மாவட்டத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்கும் விதமாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்கள் கட்டாயமாக இ-பாஸ் பெற வேண்டும். அவ்வாறு இ-பாஸ் பெறாமல் வருபவா்களுக்கு பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாது என்று மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடிமகன்களுக்கு மேலும் ஒரு குஷியான செய்தி..

naveen santhakumar

5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதாம் ?

News Editor

நாசா விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் திருச்சி மாணவி..!

naveen santhakumar