சென்னை:-
மது பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் மது காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இருந்த மது விற்பனை செய்யப்படுகிறது. இதனை மேலும் 2 மணிநேரம் அதாவது இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு கட்ட போராட்டங்களில் பிறகு மது விற்பனை கடந்த 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. மது விற்பனை தொடங்கிய முதல் நாளில் 163 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையானது. நேற்று (மே 17) 133 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
இதில் மாநகர பகுதி நீங்கலாக சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 34.8 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.