பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https : //tnvelaivaaippu.gov.in- ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது .
2021 ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 17 ந் தேதி வழங்கப்பட உள்ளதையடுத்து 17 ந் தேதி முதல் அக்டோபர் 1 ந் தேதி வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி , அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை , பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளது .
இந்த தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது .