தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருவனந்தபுரம்:-
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
இன்று (வியாழன்) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார்.
இதனிடையே வழிபட விரும்பும் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ள தேவஸ்வம் போர்டு, நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையின் ‘கொரோனா நெகட்டிவ்’ சான்று அல்லது தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.