சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு ரோபோக்கள் மூலம் உணவு வழங்கப்படுகிறது.
இந்த ரோபோக்களை ஷென்ஸென்-னை (Shenzhen) சேர்ந்த புடு டெக்னாலஜி (Pudu Technologies co) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
வைரஸ் பாதித்தவர்களை பார்க்க செல்லும் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் உள்ள கொரோனா பாதித்தவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இந்த ரோபோக்களை பணியில் அமர்த்தி உள்ளனர்.
நோயாளிகள் உள்ள அறைகளுக்கு செல்லும் ரோபோ அவர்களின் அறை எண்ணையும் அவர்களின் பெயரையும் சொல்லி அழைக்கிறது.
அவர்கள் வெளியே வந்தவுடன் இந்த ரோபோ அதன் எந்த அடுக்குகில் அவர்களது உணவு உள்ளது என்பதையும் கூறுகிறது.
உணவை எடுத்த பின்னர் ‘Finish’ பட்டனை அழுத்த சொல்கிறது. அவர்கள் அழுத்தியவுடன் அங்கிருந்து மற்ற அறைகளுக்குச் செல்கிறது ரோபோ. அத்தோடு ‘விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்’ என்றும் கூறுகின்றன இந்த ரோபோக்கள்.