ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…அதிர்ஷ்டசாலியான மிதுன ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாதத்தின் முற்பகுதியில் உங்களுடைய ராசிநாதனும் நான்காம் இட அதிபதியான புதன் ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பது மிகச்சிறந்த யோகம் ஆகும். இந்த அமைப்பு அனைத்து பாக்கியங்களையும் அனுபவிக்க வேண்டிய காலகட்டம் என்பதை உணர்த்துகிறது.

மாதத்தின் பிற்பகுதியில் வக்ரகதி அடையும் புதன் ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டிய நிலைமையை ஏற்படுத்துவார் ராசியில் திருவாதிரையில் பயணிக்கும் ராகு எந்த ஒரு செயலையும் துணிச்சலுடன் செய்வதற்கான நிலைமையை ஏற்படுத்துவார் எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையாகவும் நிதானத்தையும் கடைபிடிப்பது தான் சிறந்த தீர்வாகும்.


உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தில் இருப்பது தொழிலில் நல்ல முன்னேற்ற நிலைமையை சுட்டிக்காட்டுகிறது. பத்தாம் இடத்தில் உச்சம் பெற்ற சுக்கிரன் தன்னுடைய ஏழாம் பார்வையால் நான்காம் வீட்டைப் பார்ப்பது வீடு வண்டி வாகனம் வாங்குவதற்கான சுப செலவுகளை சுட்டிக்காட்டுகின்றது.குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும் இளம் பருவத்தினர் தங்களுடைய வாழ்க்கை நிலையை அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய அடித்தளங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.தன காரகனான குரு வலுப்பெற்ற நிலைமையில் உங்களுடைய ராசியைப் பார்ப்பது நல்ல பொருள் வரவை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ALSO READ  விதியை மதியால் வெல்லலாம் எப்படி?

உங்களுடைய ராசிக்கு அஷ்டமச்சனி தொடங்கிவிட்டதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தையும் பொறுமையும் காக்க வேண்டியது மிகமிக அவசியமான ஒன்றாகிறது எந்த ஒரு சூழலிலும் வீண் வாக்குவாதங்கள் வம்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். அஷ்டம சனி காலகட்டத்தில் அதிகமான தடைகளையும் வரவேண்டிய தொகை வராமல் இருப்பதையும் உறவுகளால் மனக்கசப்பையும் சந்திக்க நேரிடும். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எந்த ஒரு விஷயத்தையும் அகலக்கால் வைக்கக்கூடாது.வீண் பழி வந்து சேரும்.நன்கு பழகியவர்கள் எதிரிகளாகவும் துரோகிகளாகவும் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம்.

ஹோட்டல் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால் கடன் வாங்குவதை தவிர்த்து கொள்ளுங்கள் முகம் தெரியாதவர்களுக்கு உதவுகிறேன் என்று போய் வம்பு வழக்கு பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள் வலுப்பெற்று குரு ராசியைப் பார்ப்பதால் பெரிய வம்புகளில் வழக்குகளிலும் மாடிக்கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும் கவனம் தேவை எச்சரிக்கையுடன் செயல்பட்டு நன்மை அடைவீர். சந்திராஷ்டம நாட்கள் அன்று வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.

ALSO READ  திடீரென கடையை மூட சொன்ன அதிகாரிகள்; புதுச்சேரியில் பரபரப்பு !

சந்திராஷ்டம நாட்கள்: 20-ம் தேதி மதியம் 1.45முதல் 23-ம் தேதி அதிகாலை 12:30வரை.

வழிபட வேண்டிய தெய்வம்:தட்சிணாமூர்த்தி

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தடுப்பூசியால் மேலும் ஒருவர் உயிரிழப்பு…!

News Editor

தினமும் இந்த மனுசன் ஒருதர் தான் மேல வா மேல வான்னு மோட்டிவேட் பண்ணுராரு!

Admin

இன்று வைகாசி விசாகம்.!! வைகாசி விசாகம் என்றால் என்ன? இந்நாளின் சிறப்புகள் தெரியுமா? 

naveen santhakumar