வாகன சந்தையில் மிகவும் பிரபலமான அம்பாசிடர் மீண்டும் புதிய வடிவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆக்கிரமித்த அம்பாசிடர்,மாருதி 800 கார்களின் உற்பத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. என்னதான் புதிய கார்களின் வருகை தொடர்ந்து அதிகரித்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது அம்பாசிடர் கார்.
1954 ஆம் ஆண்டில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த லேண்ட் மாஸ்டர் என்ற காரை பிற்காலத்தில் அம்பாசிடராக பெயர் மாற்றம் செய்யப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்றே.
2000ம் ஆண்டு வரை முக்கிய பிரமுகர்களின் விருப்பமான வாகனமாக இருந்த அம்பாசிடரின் விற்பனை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் 2014 ஆம் ஆண்டு வாகன சந்தையிலிருந்து இந்த கார் மாடல் நீக்கப்பட்டது.
இந்நிலையில் பிரெஞ்ச் கார் உற்பத்தி நிறுவனமான பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் காரை உரிமையை வாங்கி உள்ளது. இதன்மூலம் அம்பாசிடர் கார் மீண்டும் புதிய வடிவில் இந்திய சந்தையில் அறிமுகம் ஆக உள்ளது. அது குறித்த வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.