இலங்கை நாட்டிற்கு விசா இல்லாமல் சுற்றுலா வரும் திட்டத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க அந்நாட்டின் சுற்றுலாத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்களில் ஒன்றான அயல்நாடுகளில் இருந்து இலங்கைக்கு விசா இல்லாமல் சுற்றுலா வர பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, இதுதொடர்பாக குழுவையும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நிர்ணயித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் விசா இன்றி சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருகின்றனர்.
இந்நிலையில், விசா இல்லாமல் இலங்கைக்கு சுற்றுலா வரும் திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 30 தேதி வரை சுற்றுலாப்பயணிகள் விசா இல்லாமல் இலங்கைக்கு வரலாம்.
இதன்மூலம் அதிக அளவிலான சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.