குடும்பத்துடன் சுற்றுலா சென்ற குடும்பத்தில் நான்கு பேர் அமேசான் காட்டில் 34 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளனர்.
கொலம்பியாவை சேர்ந்த மரியா என்பவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பெரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள மிகப்பெரிய காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பின் கணவரை தவிர மரியா மற்றும் மூன்று குழந்தைகள் அமேசான் காட்டிற்குள் சென்று திரும்பி வரும் வழி தெரியாமல் தவித்தனர்.
பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் இவர்களைப் பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க சுமார் 34 நாட்கள் கழித்து நால்வரும் மீட்கப்பட்டுள்ளனர்.
காட்டில் கிடைத்த பழங்களை உண்டு நாட்கள் கழித்து அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் நீர் சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும் அவர்கள் மரணத்தின் விளிம்புவரை சென்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்