சமீபத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் சாதனை படைக்க உறுதுணையாக இருந்தது நைக் நிறுவனத்தின் Vaporfly ஹூக்கள்.
நைக் நிறுவனத்தால் உயர் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த Vaporfly காலணிகளை பயன்படுத்துவதால் வீரர்களின் ஆற்றல் திறன் ஆனது நான்கு சதவீதத்திற்கும் அல்லது அதற்கு மேல் அதிகரிப்பதாக நிபுணர்கள் மற்றும் தடகள வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் சம்மர் ஒலிம்பிக் போட்டியில் சமீபத்தில் உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு காலணிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் லநக் நிறுவனத்தின் தயாரிப்பான Vaporfly மற்றும் Alphafly காலணிகள் தடை விதிக்கப்படலாம் என்று என்று கருதப்பட்டது.
ஆனால் நிறுவனத்தின் இந்த வகை எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நைக் நிறுவனத்தின் இந்த Vaporfly காலணிகள் சர்ச்சைக்கு உள்ளாகி காரணம் என்ன :
தடகள வீரர்கள் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய அடங்கிய குழுவின் ஆய்வின் படி இந்த காலணிகள் தடகள வீரர்களின் ஓட்டத்திறனை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிக்காகோ மாரத்தான் ஒலிம்பிக் போட்டியில் பிரிகிட் கஸ்ஜே (Brigid Kosgei) 2 மணிநேரம் 14 நிமிடம் 4 வினாடிகளில் கடந்தார் இது பவுலா ராட்கிளிஃப் முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.
அவரின் சாதனையை விட 81 வினாடிகள் இது குறைவாகும். இப்போட்டியில் இவர் நைக் நிறுவனத்தின் Vaporfly காலணிகளை அணிந்து ஓடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கடந்த 2018ம் ஆண்டு பெர்லின் மாரத்தான் போட்டியில் Vaporfly ஐ அணிந்து யூலியட் கிப்கோஜ் (Eliud Kipchoge) உலக சாதனை படைத்துள்ளார்.
இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வடிவமைக்கப்படும் காலணிகள் வீரர்களின் ஓட்ட திறனை அதிகரிப்பது என்பது முற்றிலும் நியாயமற்றது என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.
எனினும் ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி புதிய உயர் தொழில் நுட்பம் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கால் அணிகளுக்கு டோக்கியோ சம்மர் ஒலிம்பிக்கில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த Vaporfly காலணிகள் 2016ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட காரணத்தால் இவற்றுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.