தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் 1 லட்சத்து 30 ஆயிரம் யானைகள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக யானைகளை கொண்டுள்ள போட்ஸ்வானாவில், யானைகள் தாக்குதல் அதிகமாக உள்ளது அதுமட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் யானைகளால் சேதப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால் யானைகளை வேட்டையாட விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு அதிபர் கடந்த ஆண்டு நீக்கினார். அதன்பின்னர் யானைகளை வேட்டையாட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான நடைமுறை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த ஏலத்தில், 7 நிறுவனங்களுக்கு யானைகளை வேட்டையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் 272 யானைகளை கொல்ல அந்நாடு திட்டமிட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.