நியூயார்க்
ராஷ்ட்ரீய ரக் ஷா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினருமான பேராசிரியர் பிமல் படேல் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச சட்ட ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் கடும் போராட்டத்திற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐந்தாண்டு காலத்திற்கு இந்த பொறுப்பில் செயல்படுவார்.
சர்வதேச சட்ட ஆணையம் 1947ல் அமைக்கப்பட்டது. சர்வதேச அளவிலான சட்ட வரையறைகள் உருவாக்குவது இந்த ஆணையத்தின் பிரதான பணியாகும். இந்த ஆணையம் 34 உறுப்பினர்களை கொண்டதாகும்.
சர்வதேச சட்டக் கமிஷன்.ஐ.நா.,வின் ஒரு அமைப்பான இதில், 34 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எட்டு இடங்களுக்கு, 11 நாடுகள் இடையே கடும் போட்டி இருந்தது. .
பேராசிரியர் பிமல் படேல் 163 ஓட்டுகள் பெற்று இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் பிமல் படேல் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.