தொடர் இருமலால் அவதிப்பட்ட முதியவருக்கு பரிசோதனை முடிவு தந்த அதிர்ச்சி
சீனாவைச் சேர்ந்த 60 வயது முதியவர் கடந்த 2 மாதங்களாக தொடர் இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். ஆனாலும் இருமலுக்கான காரணம் தெரியவில்லை. இதனால் பிரான்கோஸ்கோபி சிகிச்சை திட்டமிடப்பட்டது. அந்த பரிசோதனை முடிவை பார்த்து அந்த முதியவர் மட்டுமல்ல மருத்துவமனை நிர்வாகமே அதிர்ச்சியடைந்தது.
காரணம் அவரது உடலில் 2 அட்டைப் பூச்சிகள் இருப்பது தெரிய வந்தது. அதில் ஒரு அட்டைப்பூச்சி அவருடைய வலது நாசியிலும், இன்னொன்று தொண்டைப் பகுதியிலும் இருந்துள்ளது. பின் அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவை வெளியே எடுக்கப்பட்டன.
அந்த முதியவர் சில மாதங்களுக்கு முன்பு மலைப்பகுதியிலிருந்த அருவியில் தண்ணீர் குடித்துள்ளார். அதன்மூலம் அவர் உடலில் சென்ற அட்டைப்பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி வாழ்ந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.