ஈரான் நாட்டின் மீது போர் புரிவதை தவிர்க்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் ட்ரம்ப் மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 3ம் தேதி ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்நாட்டின் ராணுவ தளபதில் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பழி தீர்ப்போம் என கூறிய ஈரான், ஈராக்கில் உள்ள ராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் எப்போது போர் வெடிக்கும் என்ற பதற்றம் உலக நாடுகளை அச்சப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்க போர் மேற்கொள்வதை தவிர்க்கும் வகையில் அதிபர் ட்ரம்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்த அவர் மீது அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு , ட்ரம்பின் குடியரசு கட்சியினர் 3 பேர் ஆதரவு அளித்தனர்.இதன்மூலம் ஆதரவாக 224 ஓட்டுகளும், எதிராக 224 ஓட்டுகளும் கிடைத்தது.
ஆனால் இத்தீர்மானம் செனட் சபையில் நிறைவேறுமா என தெரியவில்லை. ஏனென்றால் அங்கு குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் பெருமான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.