ஜப்பானில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்ட சில நாட்களிலேயே 30 வயது மதிக்கத்தக்க இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியில் உலோகத் துகள்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்ததாகவும் ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தடை செய்யப்பட்ட மூன்று உற்பத்தி மையங்களிலிருந்து வந்த தடுப்பூசிகளை தான் இறந்தவர்கள் செலுத்தி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தடுப்பூசியின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். கலப்படம் இருந்ததால் தான் தடுப்பூசி விஷமாக மாறியிருக்கிறது. எப்படி கலப்படம் நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
சர்ச்சைக்குரிய பேட்ச் எண்களைக் கொண்ட தடுப்பூசிகள் முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளன. தேவையில்லாமல் யாரும் குழம்ப வேண்டாம் என மாடர்னா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.