சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா இன்று உலகில் அனைத்து நாடுகளுக்கும் பரவி விட்டது. உலக நாடுகள் அனைத்து செய்வதறியாது திக்கித் திணறி வருகிறது. இதனால் ஒட்டு மொத்தமாக உலகமே முழு ஊனடங்கில் உள்ளது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் கொரோனா தாக்கம் குறைந்ததாக சீனா அறிவித்தது. அறிவிப்பு வெளியான அடுத்த நாளே யூனான் ( Yunnan) மாகாணத்தில் ஹண்டா வைரஸூக்கு ஒருவர் பலியானார்.
இந்த களேபரங்கள் அடங்குவதற்குள் அடுத்ததாக சீனாவில் பறவை காய்ச்சல் பெருமளவில் பரவி வருகிறது. அதுவும் H5N1, H5N6, H7N9 என மூன்று விதமான வைரஸ்கள் பரவி வருகிறது.
சீனாவில் அன்ஹூய் (Anhui), ஹூபேய் (Hubei), ஹெனான் (Henan), ஹூனான் (Hunan) ஆகிய மாநிலங்களில் இந்த பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதியே ஹூனான் மாகாணத்தில் H5N1 பறவைக்காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளது. அடுத்ததாக எந்த மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதோ அதே ஹூபேய் இந்த பறவை காய்ச்சல் பரவிவருகிறது.
இதையடுத்து ஷாவோயாங் (Shaoyang) மகாணத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக 18,000 கோழிகள் கொல்லப்பட்டுள்ளது.