அமெரிக்காவில் பீட்சா செய்ய ஆசைப்பட்ட குடும்பத்தினருக்கு எதிர்பாராதவிதமாக சம்பவம் நடைபெற்றது. துரித வகை உணவுகளில் மிக பிரபலமானது பீட்சா. வேறு வகைகளில் கிடைக்கும் பீட்சாவை வாரம் ஒருமுறை பலருக்கும் சாப்பிடாமல் இருக்க முடியாது.
இதேபோல் அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் பீட்சா செய்ய ஆசைப்பட்டு மைக்ரோவேவ் ஓவனுக்குள் அதனை தயார் செய்து வைத்தார்கள். ஓவனுக்குள் இருந்து பீட்சா வாசனையோடு இணைந்து பெரியதோ பொருள் கருகும் வாசனையும் வெளியானது. இதனால் அவனை அணைத்து பீட்சாவை வெளியே எடுத்து பார்த்தனர். ஆனாலும் அவர்களுக்கு எதுவும் புரியவில்லை.
நன்கு தயாராகிய அந்த பீட்சாவை ருசி பார்க்க தொடங்கினர். அதனுள் இருந்து கயிறு போல ஏதோ இருந்தது. அதனை உற்றுப் பார்த்தபோது தான் பாம்பு சேர்த்து அந்த பீட்சா தயாரானது தெரியவந்தது. அந்த தம்பதியினர் வசிக்கும் வீடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ளதால் குளிர் காலத்தில் வெப்பத்துக்காக பாம்பு உள்ளே சென்று இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இனி பீட்சா செய்ய ஆசைப்படுவோர் முதலில் உங்கள் ஓவனுள் எதுவும் இருக்கிறதா என்பதை பார்த்துவிடுங்கள்…