ஸ்டோக்ஹோம்:
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
2021 ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன் மற்றும் இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.
இந்த மூவரில் ஸ்கியூரோ, கிளாஸ் ஹசில்மேன் இருவரும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுத்திருந்தவர்கல். ஜார்ஜியோ பரிசிக்கு, உடல்கோளாறுகள் மற்றும் ஏற்ற இறக்கங்களின் இடைவெளியை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வாகியிருப்பது தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது.