லண்டனில் தரை இறங்க வேண்டிய விமானம் ஒன்றில் எரிபொருள் இல்லை என விமானி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை இங்கிலாந்தில் வான்படை பயன்படுத்த உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு தரை இறங்க வேண்டிய விமானங்கள் அனைத்தும் Gatwick, luton, stansted விமான நிலையங்களில் தரையிறங்கப்பட்டன.
இதில் சில விமானங்கள் தரையிறங்க அனுமதி கிடைக்காமல் வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
இந்நிலையில் வானில் வட்டமிட்ட விமானம் ஒன்றில் 5 நிமிடங்களில் காண எரிபொருள் மட்டுமே உள்ளதாக விமானி தெரிவித்ததாக பயணி ஒருவர் கூற மொத்த விமானமும் பயத்தில் உறைந்தது.
இது குறித்து தகவல் வெளியானவுடன் விமானமானது Gatwick விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட அறிக்கையில், எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஹீத்ரோ விமான தளத்தை இங்கிலாந்து வான்படையினர் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டதால் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.