ஹூஸ்டன்:-
ஆஸ்திரிய நாட்டின் இளவரசி மரியா கலிட்சின் (31) (Maria Petrovna Galitzine) அமெரிக்காவின் ஹூஸ்டனில் காலமாகியுள்ளார்.
மரியவுக்கு திடீரென்று ஏற்பட்ட Cardiac Aneurysm என்னும் பிரச்னையால் இயற்கை எய்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் வல்லுநரான (Chef) ரிஷி ரூப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் அவர்களது திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு மாக்சிம் என்கிற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது.
இளவரசி மரியா அரசர் கார்ல் I ( Emperor Karl I (Charles I of Austria)) அரசி ஸிடா ட போர்போன்-பார்மா (Zita de Borbon-Parma) வம்சாவளிமை வழியைச் சேர்ந்தவர்.
இளவரசியாக இருந்தாலும் மரியா, ஹூஸ்டனில் இன்டீரியர் டிசைனராக பணி செய்து வந்தார். ஹூஸ்டனில் மிகவும் புகழ் பெற்ற செஃபாக விளங்குபவர் ரிஷி ரூப் சிங்.
1988 ஆம் ஆண்டு லுக்சம்பெர்கில் பிறந்த மரியா, 5 வயதில் ரஷ்யாவுக்குச் சென்றார். பெல்ஜியமில் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தார். கல்வியை முடித்தப் பின்னர் புருசெல்ஸ், சிக்காகோ, இலினோய் மற்றும் ஹூஸ்டனில் பணியாற்றியுள்ளார் இளவரசி மரியா.
கடந்த மே 4 ஆம் தேதி மரியா, உயிரிழந்துள்ளார். அவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பின்னர் ஹூஸ்டனில் உள்ள ஃபாரஸ்ட் பார்க் வெஸ்தெய்மெர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
இளவரசி மரியாவுக்கு, சீனியா கலிட்சின் டி மட்டா, டாடியானா கலிட்சின் சீரா மற்றும் இளவசரி அலெக்சாண்டா உள்ளிட்ட மூன்று சகோதரிகளும், இளவரசர் திமித்ரி மற்றும் இளவரசர் லோவான் ஆகிய சகோதரர்களும் உள்ளனர்.