தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பிரேசில் :
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது.மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா மோன்லேவாட் என்னுமிடத்தில் 45 அடி உயரப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் இயந்திரக்கோளாறு காரணமாக பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.பிரேசிலில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொடிய விபத்து இதுவாகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.