குழந்தையின் தலை டீ பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் தன்னிலை மறந்து விளையாடுவார்கள். அவர்களை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. சில நேரங்களில் வேடிக்கையான சில விஷயங்கள் நிகழ்ந்து விடுகிறது.அதே போல் தான் தற்போது சீனாவை சேர்ந்த 2 வயது குழந்தை டீ போடும் பாத்திரத்தை வைத்து விளையாடி உள்ளது.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை டீ பாத்திரத்தினுள் சிக்கிக் கொண்டதால் வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு வீரர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாத்திரத்தை சிறிய கத்தி மூலம் வெட்டி குழந்தையின் தலையை வெளியே எடுத்து உள்ளனர். தற்போது குழந்தை எந்த ஒரு பாதிப்பும் இன்றி நலமாக உள்ளது.
குழந்தைகள் இதுபோன்ற பொருட்களோடு விளையாடும் போது பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிப்பது அவசியம் ஆனது.தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.