லண்டன்:-
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் வைரஸால் பாதிக்கப்பட்ட 51 வயதான பெண்மணி தனது கடைசி நிமிடங்களில் தனக்கு பிடித்தமான பாடலை கேட்டுவிட்டு இறந்திருக்கிறார்.
பிரிட்டனைச் சேர்ந்த பெண்மணி கே எல்மர் (51) (Kay Elmer). இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 95% அவருக்கு ஆக்சிஜன் (செயற்கை சுவாசம்) அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கருதி தன்னுடைய மகளுக்கு அவர் தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தான் உயிரிழக்க போவதாகவும் தனக்கு பிடித்தமான பாடலை தொலைபேசியில் ஒலிக்க விடுமாறு பரிதாபமாக கேட்டிருக்கிறார்.
இது குறித்து கூறிய கே எல்மர்-ன் மகள் சோபியா எஸ்ஸல் (Sophia Essel):-
என் அம்மாவிற்கு டீனா டர்னர் (Tina Turner) பாடல்கள் மிகவும் பிடிக்கும் தன்னுடைய உயிர் பிரியும் நேரத்தில் அந்த பாடல்களை ஒலிக்க விடுமாறு என்னிடம் கூறினார் .
அவருடைய இறுதி மூச்சுவரை அவருக்கு பிடித்தமான அனைத்து பாடல்களையும் தாங்கள் ஒழிக்க விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார் சோபியா. பிரிட்டனில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும். ஊரடங்கு காரணமாக சோபியா அவருடைய சகோதரரும் தன் தாயின் இறுதி நேரங்களில் அவருடன் இருக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கில் இரண்டு பேருக்கு மேல் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.