சான் பிரான்சிஸ்கோ:-
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் இந்த வருட இறுதி வரை வீட்டிலிருந்தே பணி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் உலகம் முழுவதும் ஜூலைக்கு முன்பாக பேஸ்புக் அலுவலங்கள் திறக்கப்படாத என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் ஜூலை ஆறாம் தேதி முதல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தில் தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர் ஃபேஸ்புக் வன ஊழியர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டிலிருந்தே வேலை (Work From Home) செய்து வருகின்றனர்.
மேலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை 50 பேருக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் பேஸ்புக் நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதில் சென்ஜோஸ்-ல் நடைபெற இருந்த Oculus Connect 7 விர்ச்சுவல் ரியாலிட்டி நிகழ்ச்சியும் அடங்கும்.
இதுவரையில் பேஸ்புக் நிறுவனம் எப்பொழுது திறக்கப்படும் என்பதை அதிகாரபூர்வமாக அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் அறிவிக்கவில்லை. எனினும் இதுகுறித்து விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நகர் பார்க் இந்த வருடம் ஜூன் மாதம் வரையில் எந்த விதமான தொழில் சார்ந்த பயனும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
மொத்தத்தில் பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தோ அலுவலகத்திலிருந்தோ வேலை செய்யவில்லை எனில் நாம் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்த முடியாது.
முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் போனசாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.