பாரீஸ்:-
பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு போராடி வரும் நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள அரசு எங்களை நிர்வாணமாக அனுப்புகிறது என்ற குற்றச்சாட்டை கூறி
பிரான்ஸ் செவிலியர்கள் நிர்வாணமாக தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிரான்ஸில் கொரோனாவால் 89,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 14,008 பேர் வரை மீண்டுள்ளனர், 7,560 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரத்தின் துவக்கத்தில், அரசுக்கு எதிராக செவிலியர்கள் பலர் ஆர்ப்பாட்டம் துவங்கியுள்ளனர். அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு, #Poilcontrelecovid என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வயதினரின் மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பிரான்சின் செவிலியர் Melina Dufraigne-Laflechelle கூறுகையில்:-
நாங்களும் எங்கள் நோயாளிகளும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். செவிலியர்களும் நோயாளிகளும்
நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சையளிப்பதற்கும், எங்களுக்கும் எங்கள் நோயாளிகளுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் தேவை. உள்ளூர் மருத்துவ ஊழியர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்றுள்ள முக மூடிகள் எல்லாம் பழைய முகமுடிகள். நாட்டின் சுகாதார துறை 15 முதல் 20 ஆண்டுகளாக மோசமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.