அமெரிக்காவில் மூன்று குழந்தைகளையும் பெற்ற தாயை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் பகுதியில் 3 சிறுவர்களின் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 22 வயதான ரேச்சல் ஹென்றி என்பவரை கைது செய்தனர்.
முதலில் மூன்று பிள்ளைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக நாடகமாடிய அவர், பின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ரேச்சல் ஹென்றி அங்கு அவர்கள் எவ்வாறு கொலை செய்யப் பட்டனர் என்பதை நடித்துக் காட்டினார்.
கொலை நடந்த தினத்தன்று முதல் இரண்டு சிறுவர்களையும் மூக்கு மற்றும் வாயை பொத்தி கொலை செய்ததை மூன்றாவது சிறுவன் பார்த்து விட்டு தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளான்.
ஆனால் அவனுக்கு பிடித்த பாடல் ஒன்றை இசைக்கச் செய்து கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின்னர் மூன்று சடலங்களையும் சோபாவில் கிடத்தி தனது கணவரிடம் தூங்குவதாக நாடகம் ஆடியுள்ளார். ஆனால் கணவர் சந்தேகம் அடையவே இந்த கொலை சம்பவம் வெளியே வந்துள்ளது