உலகம்

பூங்காவில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு….இருவர் படுகாயம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க் :

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நசவ் நகரின் ஃபிரிபோர்ட்டில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் பூங்காவில் இன்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

இந்த துப்பாக்கிச்சூட்டில் 21 வயது நிரம்பிய நபர் மற்றும் 19 வயது நிரம்பிய நபர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.அதன் பின்னர்  துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

ALSO READ  ஈரானில் பரபரப்பு: மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது…!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 21 வயது நிரம்பிய நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு நபர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இலங்கை சுதந்திர தினவிழாவில் இனி தமிழில் தேசியகீதம் கிடையாது!

Admin

பிரிட்டனின் புதிய நிதியமைச்சரானார் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன்.

naveen santhakumar

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட பாணியில் ‘நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக’ பிரச்சாரம் செய்த டிரம்ப்:

naveen santhakumar