ஹாங்காங்:-
ஹாங்காங்கில் முதல் முறையாக வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்த 60 வயது பெண்மணியின் செல்ல பிராணியான போமெரேனியன் (Pomeraniian) வகை நாய்க்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறியுள்ள Agriculture, Fisheries and Conservation Department:-
அந்த நாய்க்கு பலமுறை நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் மிகக்குறைந்த அளவில் கொரானா வைரஸ் (COVID-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மனிதனில் இருந்து விலங்குக்கு முதல் முறையாக கொரானா வைரஸ் பரவியுள்ளது. தற்போது அந்த நாய் 14 நாட்கள் விலங்குகளுக்கான சிறப்பு மையத்தில் தனிமைபடுத்தபட்டுள்ளது.
இதையடுத்து நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளுக்கு முத்தம் தருவது, போன்ற செயல்களில் இடுபட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் மூலம் COVID-19 தொற்று பரவியுள்ளதாக இதுவரையில் எந்த நோய்பதிவுகளும் இல்லை.