இந்தியா

கொரோனோ பயத்தால் குளியறையில் மனைவியை பூட்டிய கணவன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தன் மனைவிக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற பீதியில் லிதுவேனியாவில் கணவன் ஒருவர் தன் மனைவியை குளியலறையில் அடைத்து வைத்தது பரபரப்பாகியுள்ளது.


கணவரும், அவரது இரண்டு வாரிசுகளும் சேர்ந்து இந்தப் பெண்ணை பாத்ரூமில் அடைத்து வைத்து வெளியே விடாமல் தாழ்ப்பாள் போட்டுள்ளனர்.


அந்தப் பெண் தனக்கு கரோனா வைரஸ் இருக்கும் போலிருக்கிறது என்று கூறியதால் பீதியில் இவ்வாறு செய்துள்ளனர்.

ALSO READ  மகாராஷ்டிராவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 44 பேர் உயிரிழப்பு..!

இது குறித்து கூறிய காவல்துறை செய்தி தொடர்பாளர் ரமுனஸ் மட்டோனிஸ்,
வெளிநாட்டிலிருந்து வந்த நபர் ஒருவருடன் தான் பேசியதாகவும். அதனால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அந்தப் பெண் விளையாட்டாக கூற அது விபரீதத்தில் முடிந்துள்ளது.


பிறகு நாங்கள் வந்து பெண்ணை மீட்டு பரிசோதனைக்கு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பினோம், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல்.... தனது வலிமையைகாட்டும் வடகொரிய அதிபர் கிம்....


ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த பால்டிக் நாடான லிதுவேனியாவில் 2.8 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுவரை ஒரேயொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு அதிக பலி ஏற்பட்ட இத்தாலியின் வட பகுதியான வெரோனா-லிருந்து வந்த 39 வயது நபருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் இதுவரை இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஊரடங்கு எதிரொலி- தூய்மையடையும் கங்கை , யமுனை நதிகள்!!!!

naveen santhakumar

விராட் கோலி மற்றும் தமன்னாவை கைது செய்யக்கோரி வழக்கு:

naveen santhakumar

2000 ரூபாய் இனி செல்லாதா … என்ன சொல்றீங்க?

Admin