ஷெஃபீல்டு:-
இங்கிலாந்தில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி விளக்குகள் சூழ, காதலியிடம் காதலை சொன்ன நபரின் வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் அரங்கேறி உள்ளது.
இங்கிலாந்தில் சவுத் யார்க்ஷயர் அருகே ஷெஃபீல்டு (Sheffield) பகுதியில் அம்பைடேல் சாலையில் (Abbeydale Road) உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ஆல்பர்ட் டெர் (Albert Ndre). தனது பெண் தோழியிடம் தனது காதலை படு ஃபேண்டஸியாக தெரிவிக்கும் வகையில் 60 பலூன்கள் மற்று 100 மெழுகுவர்த்திகள் (Tealight Candles) என ஒளிமயமாக தனது காதலை தெரிவிக்க எண்ணியிருந்தார்.
இதற்காக, மெழுகுவர்த்திகள் மூலம் Marry Me? என்று அழகாக அடுக்கி வைத்திருந்தார். மேலும் இரண்டு ஒயின் பாட்டில்களையும் வைத்திருந்தார்.
இதையடுத்து, தான் காதலித்து வந்த வலேரிஜா மாடேவிக் (Valerija Madevic)ஐ தனது வீட்டிற்கு அழைத்து சர்ப்ரைசாக முன் தனது காதலை தெரிவிக்க எண்ணியிருந்தார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. வீட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு தனது தோழியை அழைக்க வெளியே சென்றிருந்தார். தனது தோழியை அழைத்துக் கொண்டு இரவு 8:30 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீடு பற்றி எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
சினிமா பாணியில் படுஃபேண்டஸியாக காதலை தெரிவிக்க எண்ணிய நிலையில் தனது வீடு கடைசியில் முழுதும் பற்றி எரிந்தது. இது குறித்த புகைப்படங்களை யார்க்ஷயர் தீயணைப்புத் துறையினர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சரி கடைசியில் தனது காதலியிடம் காதலை தெரிவித்தாரா என்றால்?? ஆம், அவர் தெரிவித்தார். தனது பற்றி எரிந்த வீட்டுக்குள் தனது காதலியிடம் ப்ரபோஸ் செய்தார், அவரும் ஆல்பர்ட் காதலை ஏற்றுக் கொண்டார். தற்பொழுது இந்த காதல் ஜோடிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டேட்டிங் செயலி மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள் அதைத் தொடர்ந்து பல்வேறு முறை டேட்டிங் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.